“ஐயோ என்ன விட்டுருங்க”… காதலன் கண்முன்னே இளம்பெண்ணை கதற கதற… நாட்டையே நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்…!

Spread the love

அசாம் மாநிலத்தில் காதலன் கண் முன்பே இளம் பெண் ஒருவரை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க அந்த இளம் பெண், தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, சில்சார் நகருக்கு அருகே காரை நிறுத்திவிட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.

அந்த கும்பல் முதலில் காதலனைத் தாக்கிப் பிடித்துக் கொண்டு, அவர் கண் முன்னாலேயே அந்தப் பெண்ணை ஒருவருக்கு பின் ஒருவராகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த இளம்பெண் தங்களைக் காப்பாற்றுமாறு கெஞ்சியும், இரக்கமில்லாமல் அக்கூட்டம் இக்கொடூரத்தைச் செய்துள்ளது. அதோடு நில்லாமல், அவர்களது வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் 10 ஆயிரம் ரூபாயைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடைய சில்சார் நகரைச் சேர்ந்த நிலோத் பால் தாஸ் (25) மற்றும் சுபோல் தாஸ் (27) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் தாக்கிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காவல்துறையினர் தப்பியோடியவர்களை விரைவில் பிடிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Muthu Mani

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago