கணவன் வாங்கிய கடனுக்காக… இளம் பெண்ணை மரத்தில் கட்டி வைத்த சித்திரவதை செய்த கும்பல்.. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்..!

Spread the love

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பன், ஶ்ரீஷா தம்பதியினர் ஒரு மகனுடன் வசித்து வருகின்றனர். இதனிடையே திம்மராயப்பன் அந்த பகுதியை சேர்ந்த முனி கண்ணப்பா என்ற நபரிடம் வட்டிக்கு 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலால் திம்மராயப்பன் குடும்பத்தோடு அருகே உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகனின் பள்ளி சான்றிதழை வாங்குவதற்காக ஸ்ரீஷா நாராயணபுரம் கிராமத்திற்கு வந்த நிலையில் தகவல் அறிந்து தனது கூட்டாளிகளுடன் வந்த முனி கண்ணப்பன் ஸ்ரீஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன் கணவன் வாங்கிய 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டியுடன் உடனடியாக தரும்படி மிரட்டிய நிலையில் ஒரு கட்டத்தில் அங்கிருந்த மரத்தில் ஸ்ரீஷாவை கட்டி வைத்து துன்புறுத்தி உள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முனி கண்ணப்பா மற்றும் கூட்டாளிகளை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

3 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

5 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago