பெங்களூரு கெங்கேரி பகுதியில் உள்ள சைபர் சென்டரில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர், தனது சகோதரியின் திருமணத்திற்காக விடுப்பு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் சையத், அந்தப் பெண்ணை பொது இடத்தில் வழிமறித்து மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். “உன் ஆடைகளைக் கழற்றிவிடுவேன், உன்னை இங்கேயே அடித்துக் கொன்றுவிடுவேன்” என்று கொடூரமான முறையில் மிரட்டல் விடுத்தது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
In Bengaluru’s Kengeri, cyber centre owner Syed allegedly threatened a female employee who asked for leave: “I’ll strip you, beat you in public, and kill you.” He abused her openly on the road. Locals intervened, and police have arrested the accused. #Bengaluru #Karnataka… pic.twitter.com/gi9lbzRnhB
— ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) January 24, 2026
இந்த அத்துமீறலைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகத் தலையிட்டு சையத்தைத் தடுத்து நிறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கெங்கேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
