150 ஆண்டு கால குடும்ப பரம்பரை ரகசியம்…! பிரம்மாண்ட காளையுடன் நடைபயணம் செல்லும் பக்தர்…! ஆச்சரியமாக பார்த்து சென்ற மக்கள் கூட்டம்….!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் கோண்டு என்ற பக்தர், மிகப்பெரிய கொம்புகளைக் கொண்ட ‘கங்கராஜ்’ என்ற அரிய வகை காளையுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது சூரியாபேட்டை பகுதியை அடைந்துள்ள இவர், விரைவில் திருப்பதியை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்ட தோற்றத்துடன் கம்பீரமாக நடந்து வரும் இந்த காளையைக் கண்ட பொதுமக்கள், வழியெங்கும் பெருந்திரளாகக் கூடி வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

தங்களது குடும்பத்தினர் கடந்த 150 ஆண்டுகளாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இத்தகைய வழிபாட்டுப் பயணத்தை மேற்கொள்வதாகவும், அந்தப் பாரம்பரிய மரபையே தானும் தொடர்ந்து பின்பற்றுவதாகவும் பிரேம் கோண்டு தெரிவித்துள்ளார். இக்காளையை நந்தீஸ்வரரின் வடிவமாகக் கருதி புனிதத்தலங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் கைலாசநாதரின் அருள் கிடைக்கும் என்பது இவர்களது நம்பிக்கையாகும். முன்னதாக ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசித்த இவர்கள், அடுத்ததாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்யவுள்ளனர்.