“அடப்பாவமே…” இனிமே பொறுக்க முடியாது…” ஆளுநர் மாளிகையை அதிரவைத்த பெண்கள்… குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்…இறுதியில் நடந்த அதிரடி சம்பவம்…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, சென்னையில் பெண்கள் அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற காரணங்களைக் கூறி மசோதாவை அமல்படுத்துவதில் காலம் தாழ்த்தக்கூடாது என்றும், தற்போதைய மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.

அகில இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை உடனடியாகக் கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். இருப்பினும், தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பெண்கள் முயன்றதால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கிண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆளுநர் மாளிகைப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

   

சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைத் தவிர்க்கும் பொருட்டு, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாகப் பேருந்துகள் மூலமாக அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மகளிரின் உரிமைக்காகத் திரண்ட அமைப்பினரின் இந்த முற்றுகைப் போராட்டமும், அதைத் தொடர்ந்து நடந்த அதிரடி கைதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.