ஒரு ரூபாய் வருமானத்தில் 22 பைசா வட்டிக்கு மட்டுமே போகுது… ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடன்… நிதித்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், வரவை விடச் செலவைக் கட்டுப்படுத்துவதுதான் மிக முக்கியம் என்றும், ஆனால் தற்போதைய சூழலில் வரவைக் காட்டிலும் செலவு மிக அதிகமாக உள்ளது என்றும் கவலை தெரிவித்தார். மேலும், கடந்த 2021-2026 வரையிலான காலக்கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும், வருவாய் பற்றாக்குறை முன் எப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் கடன் சுமை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால், தமிழகத்தின் உண்மையான மொத்தக் கடன் சுமை தற்போது 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, தமிழகத்தில் தனிநபர் ஒருவருக்கான கடன் சுமை 1.28 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் வெள்ளை அறிக்கையின் மூலம் அவர் பகிர்ந்துகொண்டார்.

   

மாநிலத்தின் இந்த கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, அரசின் வருவாயில் பெரும் பகுதி வட்டி கட்டுவதற்கே செலவிடப்படுவதாக அமைச்சர் மரிய வில்சன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, தமிழக அரசின் வருவாயில் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டி செலுத்துவதற்கே செலவாகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த வெள்ளை அறிக்கை மற்றும் அமைச்சரின் உரை தற்போதைய தமிழக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.