நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடசோலை கிராமத்தில் வசிப்பவர் நாகராஜ். விவசாயியான இவர் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவை கடந்த சில நாட்களாக தாய் ஆட்டிடமிருந்து பாலை குடித்து வளர்ந்து வந்துள்ளது.
இந்தநிலையில் நாகராஜ் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டிடம் ஆட்டுக்குட்டிகள் பால் குடிக்க தொடங்கியுள்ளது. அப்போது ஆட்டுக்குட்டிகள் பால்குடிப்பதை அந்த பசுமாடு தடுக்கவில்லை. எனவே அவை தொடர்ந்து பசு மாட்டின் பாலை குடித்து வருகின்றன .இந்த ருசிகர சம்பவம் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
