மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹாலிமா சிஸ்ஸே, 2021 ஆம் ஆண்டில் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவ வரலாற்றில் ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார். இது ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்தது என்ற கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. தற்போது ஒன்பது பேரும் நலமாக உள்ளனர். 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எட்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த நாத்யா சுலேமான் வைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்து, ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் உயிர் பிழைத்ததற்கான கின்னஸ் உலக சாதனையை இப்போது அவர் படைத்துள்ளார் .
