“என் பிள்ளையை அடிச்சு…” சிறுமியின் முதுகில் இருந்த தடயம்…! மிரட்டிய பள்ளி தாளாளர்…? தாயின் பரபரப்பு புகார்…!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் அனப்பம்பட்டு பகுதியில் உள்ள சீயோன் நர்சரி பள்ளியில், ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்குக் கணக்கு பாடம் சரியாகத் தெரியவில்லை என்ற காரணத்திற்காகப் பள்ளி தாளாளர் அருள்தாஸ் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அவரது தாய் கலைவாணி மகளின் முதுகைப் பார்த்தபோது இரத்தம் கட்டிப் போயிருந்தது தெரியவந்தது.

உடனே  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவல்துறையில் புகாரளித்த நிலையில், தாளாளர் அருள்தாஸ் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். இருப்பினும், தங்களை மிரட்டிப் புகாரைத் திரும்பப் பெற வைத்ததாகக் கூறி கலைவாணி மாவட்ட ஆட்சியரிடம்  முறையிட்டுள்ளார்.

காவல் துறையினர் வழக்கை முடிக்கத் தங்களை வற்புறுத்தியதாகவும், பாதுகாப்பு கருதி முதலில் புகாரை வாபஸ் பெற்றாலும் தற்போது நீதிக்காகப் போராடுவதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த தாளாளர் அருள்தாஸ், மாணவியைத் தாக்கியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும், தற்போது யாரோ தூண்டிவிட்டதால் பெற்றோர் மீண்டும் புகாரளிப்பதாகவும் கூறினார்.

ஆனால், ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட இத்தகைய காயங்கள் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்கும் இடத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் இத்தகைய வன்முறைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

#BREAKING: “தலைகீழாக மாறிய தமிழக அரசியல்”… ஆற்காடு சுகுமாரை தொடர்ந்து முகாம் மாறினார் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. மோகன்…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள்…

5 minutes ago

“என் புருஷன் விஷம் குடிச்சிட்டார்!” – கணவனின் இறந்த உடலுக்கு அருகே கள்ளகாதலனோடு விருந்து சாப்பிட்டு கொண்டாடிய மனைவி…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி மற்றும் அவரது தங்கை தங்களது காதலர்களுடன்…

19 minutes ago

காற்றாலை சிசிடிவி-யில் சிக்கிய ‘அந்த’ ஒரு வண்டி எண்… தர்ம முனீஸ்வரன் குற்றவாளி…. 76 நாளில் போக்சோ கோர்ட் கொடுத்த மரண அடி தீர்ப்பு…!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி பிளஸ் 2…

26 minutes ago

“தமிழ்நாடே ரத்தக்காடாக மாறுகிறது.. கோட்டைக்கு வருவதும், சாப்பிடுவது மட்டும்தான் வேலையா?”.. ஆளுங்கட்சியை அலறவிட்ட எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிக்கை..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

27 minutes ago

“15 நாட்களில் 38 கொலைகள்?”… இனி தமிழ்நாட்டில் இது நடக்காது… DGP முதல் தலைமை வழக்கறிஞர் வரை… முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்த விமர்சனங்கள் அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும்…

32 minutes ago