நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் திமுக சார்பாக ராஜ்யசபா MP-யாக பதவிப்பிரமாணம் ஏற்றார். இதனையடுத்து தமிழில் தனது முதல் குரலை நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து திமுகவின் சல்மா, சிவலிங்கம் மற்றும் வில்சன் ஆகியோர் அடுத்தடுத்து தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி-ஆக பதவியேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவரை வாழ்த்தி அவருடைய கட்சியினர் #கமலஹாசன்_எனும்_ நான் என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
முன்னதாக மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் அவருக்கு பல இடங்களில் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி இருந்தார்கள். இதில் “மத்திய அரசின் கோட்டைக்குள் காந்தியின் பேரன் கமல்ஹாசன் வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கமலஹாசன் காந்தி அகிம்சையின் மீது தன்னுடைய ஈடுபாடு குறித்து பல இடங்களில் கூறியுள்ளார். மேலும் அவர் இயக்கி நடித்த ஹேராம் படத்தில் கூட காந்தியை மையமாக வைத்து நடித்திருந்தார். எனவே தான் காந்தியின் பேரன் என கமல்ஹாசனை வாழ்த்தி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…