#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. வேட்டையன் படத்தில் அமிதாபச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வேட்டையன் படத்திலிருந்து மனசிலாயோ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மிரட்டுகிறார். இந்த படம் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ரிலீஸ் ஆகிறது.
நேற்று வேட்டையன் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் இடம் பெற்ற என்கவுண்டர் சம்பவம் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்கும் வரை படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இன்று அந்த மனு விசாரணைக்கு வருகிறது. வருகிற பத்தாம் தேதி வேட்டை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது படக்குழு மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…