1 லட்சம் வோல்ட் மின்னல் பாய்ந்த… ஈஃபில் டவர்…! நொடியில் சாம்பலாகியிருக்க வேண்டிய கோபுரத்திற்கு நடந்தது என்ன..?!நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!!

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் உலகப் புகழ்பெற்ற அடையாளமான ஈஃபில் கோபுரம், அண்மையில் கடுமையான புயல் மற்றும் ஆலங்கட்டி மழையின் போது வானத்தையே பிளக்கும் வகையிலான ஒரு பிரம்மாண்ட மின்னலால் தாக்கப்பட்டது. சுமார் 1063 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் உச்சியை மின்னல் துல்லியமாகத் தாக்கிய அந்த மிரளவைக்கும் காட்சி, அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கேமராக்களில் பதிவாகி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

சுமார் ஒரு லட்சம் வோல்ட் மின்சாரத் திறன் கொண்ட அதிபயங்கர மின்னல் தாக்கிய போதிலும், ஈஃபில் கோபுரத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் அல்லது சேதமும் ஏற்படவில்லை என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அதிசயத்திற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்னவென்றால், கோபுரத்தின் உச்சிப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன மின்னல் கடத்திகள் ஆகும். இந்த கடத்திகள் மின்னலின் அபாயகரமான மின்சாரத்தை ஈர்த்து, கோபுரத்திற்கு பாதிப்பில்லாமல் பாதுகாப்பாகப் பூமிக்குள் செலுத்தி விடுகின்றன.

   

அதன் பிரம்மாண்டமான உயரம் மற்றும் இரும்பு அமைப்பின் காரணமாக, ஈஃபில் கோபுரம் இயற்கையாகவே மின்னல்களை ஈர்க்கும் ஒரு பெரிய கடத்தியாகச் செயல்படுகிறது. இதன் காரணமாக, வருடத்திற்குச் சராசரியாக 5 முதல் 10 முறை வரை இக்கோபுரத்தை மின்னல் தாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.