மனோகர் என்ற 16 வயது தெலங்கானா சிறுவனின் வாழ்க்கை பயணம், தளராத தன்னம்பிக்கைக்கு மிகச்சிறந்த உதாரணம். 7-ஆம் வகுப்பு படித்தபோது, 2021-இல் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட இவர், பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாமல் இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் மூன்று முக்கிய அறுவை சிகிச்சைகள், 4 கட்ட வேதிச்சிகிச்சை மற்றும் 17 நாட்கள் கதிர்வீச்சு சிகிச்சை எனப் பல்வேறு கடுமையான மருத்துவ சவால்களை எதிர்கொண்டார்.
மருத்துவமனையிலும் வீட்டிலும் கழிந்த அந்த மீட்புக் காலத்தை மனோகர் வீணடிக்கவில்லை. பள்ளிப்படிப்பு தற்காலிகமாக நின்றிருந்தாலும், அந்த ஓய்வு நேரத்தை தன் எதிர்காலத்திற்கான கதவாக மாற்றிக்கொண்டார். இணையத்தளம் வாயிலாக வெப் டெவலப்மென்ட், செயற்கை நுண்ணறிவு மற்றும் சேட்பாட் இன்ஜினியரிங் ஆகிய நவீன தொழில்நுட்பங்களை சுயமாகக் கற்றுக்கொண்டார். நோயின் வழியைத் தனது புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பாக மாற்றியதே அவரின் திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது கரீம்நகரில் உள்ள தெலங்கானா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு இடைநிலை வகுப்பை படித்து வரும் மனோகர், தொழில்முனைவோராகவும் அவதரித்துள்ளார். ‘M-GLAD’ என்ற தளத்தை உருவாக்கி வரும் இவர், திறமையாளர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தவும், வாடிக்கையாளர்களைப் பெறவும், நிறுவனங்கள் சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்கவும் வழிசெய்கிறார். இந்தியாவின் சொந்த ‘LinkedIn’ போல உருவாகும் இத்தளம், “நாம் தோற்றுவிட்டதாக நினைக்கும் வரை யாரும் நம்மை வீழ்த்த முடியாது” என்ற உண்மையை நிரூபிக்கிறது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…