சத்தீஸ்கர் மாநிலம் நாராயன்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகின்றார். இந்த சிறுமி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி திடீரென்று வீட்டிலிருந்து மாயமானார். இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே மாயமான சிறுமி ஊருக்கு அருகே உள்ள வயல் பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் பிறகு கோடாரியாள் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான 24 வயது வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கோடாரியால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…