சத்தீஸ்கர் மாநிலம் நாராயன்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகின்றார். இந்த சிறுமி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி திடீரென்று வீட்டிலிருந்து மாயமானார். இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே மாயமான சிறுமி ஊருக்கு அருகே உள்ள வயல் பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் பிறகு கோடாரியாள் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான 24 வயது வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கோடாரியால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
