ஆசிரியர் ஒருவர் சிறுவனை அழைத்து பாசமாக எதற்கு அழுது கொண்டே பள்ளிக்கு வருகிறீர்கள் அழுகாமல் வரவேண்டும் என்று புத்திமதி கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குழந்தைகள் அழுவதை பார்ப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்கும். அப்படித்தான் ஒரு சிறுவன் தினமும் பள்ளிக்கு அழுது கொண்டே வருகிறார்.
அவரை அழைத்த ஆசிரியர்கள் அன்பாக எதற்கு நீங்கள் அழுது கொண்டே வருகிறீர்கள், என்ன ஆயிற்று என்று ஒவ்வொரு கேள்வியாக கேட்கின்றார். அதற்கு அந்த குழந்தை பதில் கூறுகிறார். அந்த ஆசிரியர் ஒவ்வொரு கேள்வியும் பொறுமையாக குழந்தையை மிரட்டாமல் அன்பாக கேட்கின்றார். இது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது.
அந்த சிறுவனும் தனக்கு பாட்டி இல்லை என்றும், தனது பாட்டி பெங்களூருக்கு சென்று விட்டதாகவும் அதனால்தான் அழுததாகவும், எனது அம்மா நான் சாப்பிடவில்லை என்று தன்னை அடித்ததாக ஆசிரியரிடம் கூறுகிறார். மழலை கொஞ்சம் மொழியில் அவர் பேசுவதை பார்ப்பதற்கும், அந்த ஆசிரியர் கேள்வி கேட்பதும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.