கேரளாவில் தனது தாய் தான் ஆசையாக வளர்த்து வந்த பப்பாளி மரத்தை வெட்டியதற்காக சிறுவன் கதறி அழுத வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆவது வழக்கம் தான்.
அந்த வகையில் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தான் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய போது தனது வீட்டில் இருந்த பப்பாளி மரம் வெட்டப்பட்டதை கவனித்தான். இதை பார்த்து அந்த சிறுவன் கதறி அழுதான். மரத்தினை சிறுவனின் தாய் வெட்டி வீழ்த்திய நிலையில் இதனை பார்த்த சிறுவன் பள்ளி சீருடை கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்து விட்டு கதறி அழுததோடு உங்களுக்கு சாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
பின்பு சிறுவனின் பாட்டி சமாதானப்படுத்த முயன்றும் சரியாகாத சிறுவன் தனது தாய் தவறை உணர்ந்து இந்த ஒரு மரத்தை வெட்டியதால் பத்து மரங்களை சிறுவனுக்கு அவரின் தாய் வாக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு சிறுவன் சமாதானம் ஆனான். இந்த வீடியோவானது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. மரம் வளர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பது சிறுவனுக்கு கூட தெரிந்திருக்கின்றது என்று பலரும் கூறி வருகிறார்கள்.