ஆபத்திலிருந்து எப்பொழுதும் குழந்தைகளை காப்பது முதலில் தாய் தந்தையே…. வைரலாகும் யானைகளின் வீடியோ….. 

By Begam

Published on:

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்வார்கள். பொதுவாக வெளியிடங்களுக்கு சொல்லவே வேண்டாம் அவர்களது கைப்பிடியில் தான் நம் கைப்பிடி இருக்கும். அந்த அளவிற்கு நம் மீது அக்கறையுடனும், பாசத்துடன் இருப்பார்கள். அவர்களின் கண் பார்வையிலே தான் நாம் எப்போதும் இருப்போம்.

   

மனிதர்களில் மட்டும் தான் இப்படி என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்.  விலங்குகளுக்கும் பெற்றோர் பாசம் அதிகம் தான்.அந்த வகையில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு காட்டில் பேருந்துக்கு வழி விடும் மூன்று யானைகள் ஒன்று தாய் யானை, இரண்டு தந்தை யானை, மூன்றாவது அதனுடைய குட்டி யானை.

இந்த யானைக்கூட்டம் பேருந்துக்கு வழி விடும் பொழுது, தாயானையும் தந்தை யானையும் குட்டியானையை நடுவில் விட்டு தனது தந்தங்களால் குட்டி யானையை பாதுகாப்பது போன்ற வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது.