Connect with us

CINEMA

திடீரென்று கணவரின் புகைப்படத்தை பகிர்ந்து “நல்ல விஷயங்களுக்கு நேரம் எடுக்கும்-னு” Caption போட்டுள்ள நடிகை மஞ்சிமா..

‘அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இத்திரைப்படம் கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது. இதன்பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் ஒரு குடும்பமான பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார்.

   

இதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு தரவில்லை. 1997 குழந்தை நட்சத்திரமாக கலியுஞ்சல் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

இதை தொடர்ந்து தற்பொழுது வரை முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை மஞ்சிமா. சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகரான கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் .திருமணத்திற்கு பிறகு தற்போது நடிகை மஞ்சிமா மோகன் எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.

இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மஞ்சிமா மோகன். இவர் தற்பொழுது தனது கணவர் நடிகர் கெளதம் கார்த்திக்கிற்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது 2015 ல் சிறந்த நடிகர் பிரிவில் விருது வழங்கப்பட்டதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

Continue Reading

More in CINEMA

To Top