Connect with us

GALLERY

ஏர்போர்ட்டில் ஜோதிகா செய்த செயலால் அதிருப்தியில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே,  நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களிருவரும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

Surya

#image_title

   

தற்பொழுது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்த  நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்பொழுது அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Surya

இவர் நடிப்பில் இறுதியாக சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி லாலுடன் இணைந்து ‘காதல் தி கோர்’  திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .தற்பொழுது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மும்பையில் புதிய வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர்.

இந்நிலையில் நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் வெளிநாட்டிற்கு சென்று விட்டு மும்பை திரும்பிய போது விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர், நடிகை ஜோதிகாவுடன் செல்பீ எடுத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் நடிகை ஜோதிகாவோ அவருடன் செல்பி எடுத்துக் கொள்ளாமல் அவரை பார்த்து பயந்து ஓடுகிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக நடிகை ஜோதிகாவின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in GALLERY

To Top