ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள 80’s நடிகை அமலா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….

By Begam

Published on:

‘கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா’ என்ற பாடல் மூலம் நம்மை மயக்கிய நடிகை அமலா மீண்டும் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

1980களில் எல்லோருடைய கனவு கன்னியாக இருந்த நடிகை அமலா. இவர் ‘மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தன்னுடைய இயல்பான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இவர் குறுகிய காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.  மைதிலி என்னை காதலி ,மெல்ல திறந்தது கதவு, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை என்ற பல வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

   

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் புகலின் உச்சத்தில் இருக்கும்போதே தன்னுடன் சேர்ந்து நடித்த நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அமலா சினிமா விட்டு விலகி தன்னுடைய குடும்ப வாழ்க்கையை நடத்தினார். இவர்களுக்கு நாகசைதன்யா, அகில்  என்ற இரு மகன்கள் உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான ‘கணம்’ என்ற சூப்பரான திரைப்படத்தின் மூலம் சினிமாவில்  ரீ என்ட்ரி கொடுத்தார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று ‘பரதநாட்டியம்’.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும் முறையில் மற்றொரு செய்தியும் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல தொலைக்காட்சி சேனலாக உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘உரிமை’ என்ற தலைப்பு கொண்ட புதிய சீரியலில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகை அமலா நடிக்க உள்ளாராம். சின்னத்திரையில்  நடிகை அமலாவை காண அவரை ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.