கடற்கரையில் கவர்ச்சி உடையில் …. ரசிகர் கேட்ட கேள்வியால் ஷாக் ஆன நடிகை அமலாபால்…… அப்படி என்ன கேட்டார்னு  தெரியுமா?…..

By Begam

Published on:

கடற்கரையில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்த நடிகை அமலாபாலிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி தற்பொழுது வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று திரை உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அனைவருக்கும் அறிமுகம் ஆனார். மைனா படத்திற்கு முன்னர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் தான்.

   

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்கள் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தெய்வத்திருமகள், வெற்றி போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரம் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார். பின்னர் முன்னணி நடிகர்களான விஜய்யுடன் தலைவா, தனுஷ் உடன்  வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து தனக்கென பெரும் அளவில் ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இறுதியாக இவர் நடிப்பில் ‘கடாவர்’ எனும் திரைப்படம் வெளிவந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், கடற்கரையில் கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ‘will you marry me ?’ என்று கேட்டுள்ளார். தற்பொழுது இந்த பதிவு ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.