ICU வில் 7 மணி நேர ஆபரேஷன் … சீரியல் நடிகை கனிகாவின் உருக்கமான பதிவு ….

By Begam

Updated on:

சீரியல் நடிகை கனிகா தன் மகன் பிறந்த போது ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றி தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

சன் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் கஸ்தூரி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கனிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பதற்கு முன்னரே இவர் மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னரப்பாக வென்றார்.

   

 

பின்னர் தமிழ் சினிமாவிற்குள் ‘5 ஸ்டார்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவர் ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். தற்பொழுது தன் மகன் பிறந்த பொழுது தான் பட்ட கஷ்டங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ‘எனது மகன் பிறந்த போது என்னிடம் காட்டவில்லை. குழந்தையின் இதயத்தில் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார்கள். இரவு வரை கூட அவன் உயிரோடு இருக்க மாட்டான் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ICU வில் எனது மகனை பார்த்ததும் என் மனம் இரண்டாக உடைந்தது. கடவுளின் கருணையால் 7மணி நேர ஆபரேஷனுக்கு பிறகு என் மகனை பிழைக்க வைத்து விட்டார்கள். இன்று வரை என் மகனை நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த பதிவானது வைரலாகி வருகிறது.