நடிகை சாய் பல்லவி தனது அம்மாவின் பிறந்தநாளை கொட்டும் அருவியில் குளித்து கேக் வெட்டி சந்தோசமாக கொண்டாடியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களிள் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழில் வெளிவந்த ‘தாம் தூம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக அறிமுகமாகி திரையுலகில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து அவர் தமிழில் மாரி 2, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது. தற்பொழுது நடிகை சாய் பல்லவி தன் அம்மாவின் பிறந்த நாளை மிகவும் சந்தோசத்துடன் கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொட்டுமருவியில் குடும்பத்தோடு விளையாடிய பின்னர் சந்தோசமாக கேக் வெட்டி தனது அம்மாவின் பிறந்தநாளை உறவினர்களோடு சேர்ந்து கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ உங்களுக்காக…..
View this post on Instagram