உத்தரப்பிரதேசம் மாநிலம் தியோரியா பகுதியை சேர்ந்த நடன கலைஞர் பிரபு (32) என்பவருக்கு திருமணம் ஆகி ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார். இதரிடையே பிரபு ஓரின சேர்க்கையாளர் என்று கூறப்படுகிறது. இதனால் அதே பகுதியை சேர்ந்த 35 வயது உடைய ராம்பாபு என்பவர் உடன் பிரபு ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த பிரபுவின் மனைவி தன்னுடைய கணவரிடம் இதுபோல நடந்து கொள்ள வேண்டாம், பிறகு நம் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று அறிவுரை கூறியுள்ளார். இருந்தாலும் பிரபு தொடர்ந்து ராம் பாபு உடன் பழகி வந்ததால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பிரபுவை பிரிந்து அவருடைய மனைவி தன் மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரபு ராம் பாபு உடன் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில் பிரபுவின் மகள் அவருடைய தந்தையை பார்க்க வேண்டும் என்று பிரபு தங்கி இருந்த வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பிரபு வேலை காரணமாக வெளியில் சென்றதால் ராம் பாபு சிறுமியை வீட்டுக்குள் அழைத்து தூங்க வைத்துள்ளார். பிறகு சிறுமி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து நேரம் பார்த்து அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டி தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அறிந்த பிரபு ராம் பாபுவிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் ஆத்திரமடங்காத பிரபு ராம் பாபுவின் ஆணுறுப்பை அறுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இருந்தாலும் தன் மகளின் இந்த நிலைமைக்கு தானும் ஒரு காரணம் என்று நினைத்து மன உளைச்சல் அடைந்த பிரபு அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராம்பாபு மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…