பள்ளியில் இறந்த 5-ஆம் வகுப்பு மாணவன்…! சிசிடிவியை பார்த்து பதறிய பெற்றோர்…. அப்படி என்ன தான் நடந்தது…? அதிர்ச்சி சம்பவம்….!!

By Devi Ramu on ஆடி 17, 2026

Spread the love

பெங்களூரு பன்னேருகட்டா சாலையில் உள்ள விவர்ஸ் காலனி தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அர்ஹான் பாஷா (12) என்ற சிறுவன், கடந்த ஜூன் 10-ஆம் தேதி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். ஆரம்பத்தில் இது இயற்கையான மரணம் என்று அவனது பெற்றோர் நினைத்திருந்த நிலையில், அண்மையில் பள்ளியின் கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளை வாங்கிப் பார்த்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சிறுவன் தனது ஆசிரியரிடம் கூறிய பிறகும், பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் அலட்சியமாகச் செயல்பட்டதே மரணத்திற்குக் காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவன் மயக்கமடைந்தவுடன் அவனைப் பள்ளி வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பாமல், சுமார் 45 நிமிடங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றித் தாமதப்படுத்தியுள்ளனர். மேலும், பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வந்து சேர்ந்தபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப் போக்கைக் கண்டித்துப் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், கோனானகுண்டே காவல் நிலைய போலீசார் இச்சம்பவத்தை இயற்கை மரணமில்லா வழக்கு (UDR) எனப் பதிவு செய்து, பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.