தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அண்மையில் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளின்போது ஏற்பட்ட தேர்வு மைய குளறுபடிகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், கடமை தவறியதாகக் கருதப்படும் 5 உயர் அதிகாரிகளைத் தற்காலிகப் பணிநீக்கம் (Suspension) செய்து நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் உதவிப்பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் சார் செயலாளர் உள்ளிட்டோர் அடங்குவர்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாயந்துள்ளது. வினாத்தாள்கள் வரிசை மாறியது மற்றும் தேர்வு தொடங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகத் தேர்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், இந்த நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தவறுகள் இழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…
அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…