அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சிப் பூசல் காரணமாகப் பிளவு ஏற்பட்டுள்ள சூழலில், தற்போது அக்கட்சியின் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) ஆகிய முக்கிய நிர்வாகிகள் தங்களின் ஆதரவாளர்களுடன் டிவிேகேயில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் டிவிேகே தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து அரங்கேறி வரும் இந்த அரசியல் நகர்வுகளால் அதிமுகவின் சட்டமன்ற பலம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, எடப்பாடி பழனிசாமி (EPS) தரப்பு கடும் அதிர்ச்சியிலும், அரசியல் ரீதியான நெருக்கடியிலும் ஆழ்ந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…