நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது கொள்ளை கொள்ளும் அழகால் ரசிகர்களை கட்டி இழுத்தார்.
இப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. தற்பொழுது இவர் பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதைகளை மிக கவனமாக கேட்டு தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டுள்ளார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தற்பொழுது இவர்கள் தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.
அதேபோல இவர் ஒரு படத்தில் நடிக்க 5 கோடி முதல் 10 கோடி வரை வாங்கி வருகிறாராம். ஜவான் திரைப்படத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு 10 கோடி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களும், கேட்ட சம்பளத்தை கொடுத்து வருகின்றனர். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு மட்டும் 200 கோடி என கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகை நயன்தாரா சமீபகாலமாக அதிகமான விளம்பர படங்களில் நடிக்க தொடங்கிவுள்ளார். 50 வினாடி ஓடும் விளம்பரத்தில் நடிக்க 5 கோடி வரை வாங்குகிறாராம் அம்மணி.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…