சென்னை மாவட்டம் முகப்பேர் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிய நகைக்கடையில் பாதி விலையில் தங்கம் திட்டம், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 % வட்டி போன்ற பல கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி உள்ளனர். இவர்கள் மக்களை ஏமாற்றி சுமார் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தெரிகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நகைக்கடை மீது பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புழல் பகுதியைச் சேர்ந்த பானுவள்ளி, சந்தோஷ், அம்பத்தூரை சேர்ந்த சுஜாதா, ஆவடியை சேர்ந்த திவ்யா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
