“பாதி விலையில் தங்கம்…. மாதம் 3% வட்டி….” கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.60 கோடியை மோசடி செய்த கும்பல்…. பகீர் தகவல்கள்….!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2025

Spread the love

சென்னை மாவட்டம் முகப்பேர் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிய நகைக்கடையில் பாதி விலையில் தங்கம் திட்டம், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 % வட்டி போன்ற பல கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றி உள்ளனர். இவர்கள் மக்களை ஏமாற்றி சுமார் 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக தெரிகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நகைக்கடை மீது பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புழல் பகுதியைச் சேர்ந்த பானுவள்ளி, சந்தோஷ், அம்பத்தூரை சேர்ந்த சுஜாதா, ஆவடியை சேர்ந்த திவ்யா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.