இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் பயன்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. செல்போனால் ஒருபுறம் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்று கொடுத்தாலும் மறுபுறம் தவறாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார் .
இதன் தாக்கத்தால் சக மாணவன் ஒருவனிடம் விபரீதமான முறையில் அத்துமீறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஆசிரியர் சமூக ஊடகங்களில் மாணவன் பார்த்த ஆபாச வீடியோக்களால் இந்த செயலை செய்துள்ளார் என்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் இதுபோல பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் செல்போன்களை பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சனைகள் சந்திக்க கூடும். எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
