நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் பனிப்பாறை உடைப்பு காரணமாக, லெண்டே கோலா மற்றும் போடேகோஷி ஆறுகளில் பேரழிவு தரக்கூடிய பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியின் சாலைகள், பாலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் அடைந்துள்ளன. இப் பேரிடரில் சிக்கி இதுவரை 389 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 977 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நேபாள பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் சுற்றுலா பயணிகள், பாதுகாப்பு படையினர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் அடங்குவர். ராணுவம், காவலர்களுடன் இணைந்து ஹெலிகாப்டர்கள் மூலம் 13,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் இந்தியர்கள் மற்றும் 21 தமிழர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் மூலம் மீட்ப நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நேரில் பார்வையிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அரசு முழு பொறுப்பேற்கும் என உறுதியளித்துள்ளார். மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேர அவசர உதவி எண்களையும் (1800 309 3793 / WhatsApp: 9289516712) அறிவித்து, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…