நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த பாதிப்பு சீரடைந்து வந்தாலும் இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை. இந்த நிலையில் 10வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி 24 புறப்பாடு விமானங்கள் 12 வருகை விமானங்கள் என மொத்தம் 36 இண்டிகோ விமானங்களின் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் கடுமையான சிரமத்தை சந்தித்துள்ளனர். ஆனால் புதன்கிழமையான நேற்று 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று அது பாதியாக குறைந்துள்ளதால் பயணிகள் ஓரளவு நிம்மதியாக உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கமான விமான சேவைகள் இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 30ஆம் தேதியன்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சரஸ்வதி என்ற மூதாட்டியிடம்,…
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கோரப் பேரழிவு வெள்ளத்தில் சிக்கி, 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின்…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கொசவன்புதூர் ஊராட்சியில், சாதியப் பாகுபாட்டின் கொடூரத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அவ்வூராட்சியின்…
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளம், பல கிராமங்களை தடம்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடிஷரீஃப் பகுதியில், பணி நிமித்தமாக தங்கியிருந்த 24 வயது செவிலியர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், "ஊழல்" என்ற…