மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் தங்கள் அவசர கால கையிருப்பிலிருந்து சுமார் 40 கோடி பேரல் எண்ணெயை சந்தையில் விடுவிக்க முன்வந்துள்ளன. இருப்பினும், எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் பிராந்தியங்களில் நிலவும் விநியோகத் தடங்கல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் அபாயம் குறித்த அச்சம் காரணமாக, விலை குறையாமல் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது.
கையிருப்பில் உள்ள எண்ணெயை வெளியிடுவது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர, உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து எண்ணெய் வெளியேறுவது தடைப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, போர் தீவிரமடைந்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் $200 வரை உயரக்கூடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளின் விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் காரணமாக, சர்வதேசப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், எண்ணெய் விலை $120 வரை நிரந்தரமாக நிலைபெற வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…