தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வரும் நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதால் பலரும் விலக உள்ளதாக அடுத்தடுத்து தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது.
அதன்படி இபிஎஸ் உடன் செங்கோட்டையன் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ்ஐ தொடர்ந்து, டிடிவியும் விலகியுள்ளார். குறிப்பாக நாளை காலை 9.15 மணிக்கு அதிமுக தொண்டர்களின் மனநிலை குறித்து மனம் திறந்து பேசும் செங்கோட்டையன், சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சந்திக்கவும் உள்ளார். அவரின் நாளைய பேச்சுக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய கூட்டணி மாற்றம் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
