தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்று ஏராளமான மாவட்டங்களில் கன மழை பெய்ததன் காரணமாக பல பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய கடல் பகுதியில் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மூன்று சுழற்சிகள் நிலவுவதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
அந்தமான் கடலின் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சுழற்சிகள் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதால் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
