செங்கல்பட்டு மாவட்டம் மதுரங்கத்தில், கோடை விடுமுறையின் போது தனது பெற்றோரால் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டதாக பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரிடம் அழுது கொண்டே தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனே பள்ளி ஆசிரியர் சைல்ட்லைனுக்கும்(child line), மகளிர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் மாணவியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, மாணவி அளித்த தகவலின் பெயரில், இக்குற்ற செயலில் ஈடுபட்ட முருகன் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பள்ளி மாணவியின் தாயாருக்கு அங்கிள் பெஸ்டிஸ்கள் அதிகமாக உள்ளதாகவும், அவர் முதலாவது இரண்டாவது கணவர்களிடமிருந்து பிரிந்து மூன்றாவது கணவர் முருகன் என்பவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அப்பா…அப்பா… என அழைத்த மகளையே முருகன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தினார். மேலும் 40 வயதில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட 13 நபர்களிடம் அனுப்பி வைத்து, பணம் சம்பாதித்ததாக பகிர் தகவல் வெளியாகியுள்ளது. பல நபர்களின் வீடுகளுக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல், மதுரங்கத்தில் ஒரு லாட்ஜில் ரூம் புக் செய்து, அங்கே மாணவியை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடின உடல் வலியாலும், மனவலியாலும் பாதிக்கப்பட்ட மாணவி, தன் கொடூர தாய் தகப்பனிடமிருந்து தப்பிக்க அரசு விடுதியிலேயே தங்கியுள்ளார். மேலும் விடுமுறை நாட்களிலாவது வீட்டிற்கு வந்து செல்லுமாறு கொடூரப் பெற்றோர்கள் டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, ஆசிரியரிடம் கதறி அழுது நிலையில், ஆசிரியர் சைல்டு ஹெல்ப்லைன்(1098) எண்ணுக்கு புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மாணவி கூறிய 13 பேரில் 2 பேர் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவரை தேடி வருகின்றனர்.
தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்ட மாணவியை போலீசார் பாராட்டியதோடு, பாதுகாப்பு அளித்தனர். படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டிய பெற்றோர்களே மாணவியை பாலியல் தொழில் ஈடுபடுத்தியது பெரும் வருத்தத்திற்குரிய விஷயம்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…