காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டுவிரல் சிக்கிய இரண்டு வயது குழந்தை மயக்க மருந்தால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தையின் கை சுண்டுவிரல் கதவு இடுக்கில் திடீரென சிக்கிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து பதறிப் போன பெற்றோர் குழந்தையை செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்ததால் சுயநினைவை இழந்து உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும் ரமணா பட பாணியில் குழந்தை உயிரோடு இருப்பது போல நாடகமாடி நம்ப வைத்து மருத்துவர்கள் ஏமாற்றுவதாகவும் பெற்றோர்கள் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
