வயிற்றில் ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மாணவன்… பட்டப் பகலில் பள்ளியிலேயே நடந்த கொடூரம்… வெறி செயலில் ஈடுபட்ட ஜூனியர் மாணவர்கள்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவிலான வன்முறை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் புனேவில் ஒரு சிறுவன் மூன்று பேரால் குத்தி கொலை செய்யப்பட்டான். அந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் வைத்தே பத்தாம் வகுப்பு மாணவனை எட்டாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அகமதாபாத்தில் கோக்ராவில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நயன் என்ற மாணவருக்கும் இவருடைய ஜூனியர் மாணவர்களுக்கும் ஏதோ சிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் பள்ளி மணி அடித்தவுடன் வீட்டிற்கு திரும்புவதற்காக நயன் தனது பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது அவரை வழிமறித்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

   

இது ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறிய நிலையில் அந்தக் கூட்டத்திலிருந்து சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நயன் வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் நயன் தனது வயிற்றில் கையை வைத்துக்கொண்டு காயத்தை மூடிக்கொண்டு பள்ளிக்குள் நடந்து செல்வது தெரிகிறது.

   

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் பள்ளியின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் சென்று ஒளிந்து கொண்டு உள்ளார். உடனே சம்பவி இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனை கைது செய்த விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.