“அம்மா GOOD BYE, நான் சாகப் போறேன்”… 19 வயது கல்லூரி மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சி தரும் காரணம்…!

Spread the love

இந்தியாவில் மருத்துவ கல்வி கனவுகள் பல மாணவர்களின் வாழ்க்கையை நாளுக்கு நாள் பாதித்துக்கொண்டு தான் இருக்கின்றன. பெற்றோர்களின் எதிர்பார்ப்பு மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்தில் சிக்கி துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது. அப்படிதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திர போரில் 19 வயதான அனுராக் அணில் போர்கார் என்ற மாணவர் கல்லூரியில் சேர வேண்டிய நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு NEET UG தேர்வில் 99.99% மதிப்பெண் பெற்று வெற்றி பெற்று அந்த மாணவர் 1475 வது ரேங்க் பெற்று உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான சீட்டை வாங்கியுள்ளார். இந்த மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில், அம்மா எனக்கு டாக்டராக விருப்பமில்லை, நான் சாகப் போறேன் என்று மாணவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். 19 வயதாகும் இந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பியதாகவும் ஆனால் குடும்பத்தினர் இந்தியாவில் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது மாணவரின் மன அழுத்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரிவிக்கின்றன. தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் நீட் தேர்வு காரணமாக மருத்துவ மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டது வேதனை அளிக்கிறது

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

8 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

8 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

8 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

8 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

9 மணத்தியாலங்கள் ago