சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தில், தர்பூசணி சாப்பிட்ட நான்கு சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டு திருமண விழாவிற்காக வந்திருந்த சிறுவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு விளையாடிவிட்டு இரவு உறங்கச் சென்ற நிலையில், அனைவருக்கும் அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது.
திங்கட்கிழமை காலை சிறுவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, 15 வயதான அகிலேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மற்ற மூன்று சிறுவர்களான ஸ்ரீதிவார் (4), பிண்டு திவார் (12) மற்றும் ஹிதேஷ் (13) ஆகியோர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அன்றைய தினம் காலையிலேயே வெட்டி வைக்கப்பட்ட தர்பூசணி துண்டுகளை, பல மணி நேரம் கழித்து மாலையில் சிறுவர்கள் சாப்பிட்டது தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் திறந்து வைக்கப்பட்டதால் தர்பூசணி கெட்டுப்போயிருக்கலாம் என்றும், அதனால் ஏற்பட்ட உணவு நஞ்சாதல் (Food Poisoning) மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வீட்டில் இருந்த மற்ற தர்பூசணி மாதிரிகளை ஆய்வக சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
தர்பூசணி பழங்கள் அதிக சிவப்பாகத் தெரிவதற்கு ‘எரித்ரோசின்’ போன்ற செயற்கை நிறமிகளும், விரைவில் பழுக்க வைப்பதற்கு ‘கால்சியம் கார்பைடு’ போன்ற அபாயகரமான ரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் உள்ளன. இதுபோன்ற ரசாயனம் கலந்த பழங்களை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், இந்தச் சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் உடற்கூராய்வு மற்றும் தடயவியல் அறிக்கை வெளியான பிறகே முழுமையாகத் தெரியவரும்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…