சமூக வலைத்தளங்களின் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடித்த திரைப்படங்களை விட இணையத்தின் மூலம் தான் இவர் மிகப் பிரபலமாக உள்ளார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பதும் நாம் அனைவரும் அறிந்து ஒன்றே. இவரை வெள்ளிக்கிழமை நாயகன், youtube சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர்.
முக்கிய பிரபலங்களின் திரைப்படங்கள் ரிலீஸ் அன்று தியேட்டர் வாசலுக்கு வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து விளம்பரம் செய்வார் கூல் சுரேஷ். அப்படி செய்தாவது தன் மார்க்கெட்டை உயர்த்தி விடலாம் என்று எப்பொழுதும் புதுப்புது வித்தியாசமான விஷயங்களை செய்து வருகிறார். இவரின் மிகப் பிரபலமான வார்த்தை ஒன்றான “வெந்து தணிந்தது காடு அண்ணனுக்கு வணக்கத்தை போடு” போன்ற முன்மொழிகளை வைத்து இவரும் எவ்வளவோ முட்டி மோதி தானும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்து முயற்சி செய்து வருகிறார்.
அந்த வகையில் தான் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் பேசினாலே அது மிகச் சர்ச்சையாக மாறும் நிலையில், பிக் பாஸ் சென்றால் இவர் பேசுவதை வைத்து பல சர்ச்சைகள் உண்டாகி மிகவும் பிரபலமாகிய விடலாம் என்று நினைத்த கூல் சுரேஷ், அங்கு சென்ற பின் தான் தெரியவந்தது, இவரை விட சர்ச்சை வாய்ந்த பலரும் இருக்கிறார்கள் என்று. பிக் பாஸில் தன் சேட்டைகள் எதுவும் எடுபடாது என்று நல்லபடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து வெளியேறி விட்டார். தற்போது இவர் பிக் பாஸில் இருந்து வெளியே வந்தபின் இவர் நடை உடை பேச்சு வார்த்தை எல்லாம் மாறியே விட்டது.
View this post on Instagram