விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் சிறுமியின் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
கீழே விழுந்த அதிர்ச்சியில் அந்த மாணவிக்கு எதிர்பாராதவிதமாக பிரசவம் ஏற்பட்டு, வயிற்றில் இருந்த சிசு பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் மூலம் சிறுமி கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்ததுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியைக் கர்ப்பமாக்கியது அவருடைய காதலன் என்பது தெரியவந்ததை அடுத்து, காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிர பிரச்சனைகளால் மனமுடைந்துபோன ஒரு பெண், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானாள். விரக்தியின் எல்லைக்கே சென்ற அவளுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்ட 24 வயது மகள் அங்கிதாவை, அவரது…
ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள மாவாய் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான கீதா தேவி என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை…
முதல் சந்திப்பிலேயே ரூ 20,500 கட்டணம் என்பது மிகவும் அதிகம், மேலும் இது சமீபத்தில் டேட்டிங் செயலிகளில் பலருக்கும் நடக்கும்…
2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று நிகழவுள்ளது. இந்த முழு சூரிய…
தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…