மந்திரவாதி சொன்ன ஒற்றை வார்த்தை… மகனைக் காக்க 10 வயது சிறுவனை துடிதுடிக்க நரபலி கொடுத்த கொடூரம்… அதிர வைக்கும் பின்னணி…!

By Nanthini on தை 11, 2026

Spread the love

உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரச் செயலில் ஈடுபட்ட உறவினருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த அனூப் குமார் வர்மா என்பவரின் மகன் அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஒரு மாந்திரீகனைச் சந்தித்தபோது, குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் மகன் குணமாகிவிடுவான் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் அனூப் குமார் தனது உறவினரின் மகனான விவேக் வர்மா என்ற 10 வயது சிறுவனைக் கடத்திச் சென்று நரபலி கொடுத்துள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி சுனில் பிரசாத், குற்றவாளி அனூப் குமாருக்கு மரண தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இருப்பினும், இந்தச் செயலுக்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கருதப்பட்ட மாந்திரீகன் உட்பட இருவர் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மனிதாபிமானமற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.