“30 ரூபாய் தான், 10 ரூபாய்க்கு தர முடியாது”… வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கத்திக்குத்து…10 நிமிட மரணப் போராட்டம்… பதறவைக்கும் பின்னணி…!

Spread the love

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில், வெறும் 10 ரூபாய் பணத்தகராறு காரணமாக இரு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீராம்குடா பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே ‘ஸ்ரீ சாய் கறி பாயிண்ட்’ என்ற உணவகத்தை உதய் மற்றும் அஜய் ஆகிய சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு, அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர் கடைக்கு வந்து, 10 ரூபாய்க்கு மட்டும் கறி குழம்பு தருமாறு கேட்டுள்ளார். கடையின் குறைந்தபட்ச விலையே 30 ரூபாய் என்பதால், ஊழியர்கள் வழங்க மறுத்ததே இந்த வன்முறைக்கு வித்திட்டுள்ளது.

தன்னுடைய கோரிக்கையை நிராகரித்த கடை உரிமையாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜீவரத்தினம், ஆத்திரத்துடன் அங்கிருந்து வெளியேறினார். ஆனால், சிறிது நேரத்திலேயே கையில் ஒரு நீண்ட வாளுடன் மீண்டும் கடைக்குத் திரும்பிய அவர், யாரும் எதிர்பாராத விதமாக கடையின் ஷட்டரை உள்ளே இருந்து பூட்டினார். தான் கொண்டு வந்த வாளால் உதய் மற்றும் அஜய் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினார். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த வெறிச்செயலால் கடை முழுவதும் ரத்தக் களரியானது.

சகோதரர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கடையின் ஷட்டரைத் திறந்து அவர்களை மீட்டனர். இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த உதய் மற்றும் அஜய், தற்போது தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த வட்டாட்சியர் அலுவலகம் அருகிலேயே, பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக அமீன்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளி ஜீவரத்தினத்தைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் சம்பவத்தின் போது போதையில் இருந்தாரா அல்லது பழைய பகை ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வெறும் 10 ரூபாய்க்காக ஒரு மனிதரின் உயிர் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை, சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதைக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

2 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

3 மணத்தியாலங்கள் ago