பீகார் மாநிலம் பெட்டியா மாவட்டத்தின்நர்கதியாகஞ்ச் துணைப்பிரிவில் உள்ள ஷிகார்பூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பஹுர்வா குர்த் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இங்கு கண்காட்சி நடந்த நிலையில் அதை பார்ப்பதற்கு சென்ற 10 மைனர் சிறுமிகள் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும் சிறுமியின் விழிப்புணர்வு மற்றும் தைரியத்தின் காரணமாக அந்த கடத்தல் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இந்த கடத்தல் வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஹஸ்முதின் மியான் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். அதாவது காவல்துறை விசாரணையில், கிராமத்தில் இந்த சிறுமிகள் ஒன்றாக கண்காட்சி பார்க்க சென்றுள்ளார்கள்.
கண்காட்சி இடத்திலிருந்து ஹஸ்முதின் மியான் தன்னுடைய கூட்டாளிகளோடு சேர்ந்து முதலில் சிறுமிகளை பணம் மற்றும் இனிப்புகளை கொடுத்து ஏமாற்றி பிறகு கண்காட்சியிலிருந்து ஒரு ஆளில்லா இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர்களின் நோக்கங்களை சந்தேகித்த அந்த சிறுமிகள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளார்கள். பிறகு சிறுமிகளை வலுக்கட்டாயமாக தாக்கி அவர்களை இழுக்க தொடங்கியுள்ளார்கள்.
ஆனால் அதில் துணிச்சலான சிறுமிகள் அங்கிருந்து கத்தி அந்த இளைஞர்களின் ஒருவரின் கையை கடித்துள்ளார். பிறகு அவர்கள் அனைவரும் அங்கிருந்து நேரடியாக ஓடி கிராமத்திற்கு சென்று தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…