மவுன்டெயின் பைக் என்ற ரகத்தில் குறிப்பிடப்படும் இந்த மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிள் மொடல் ஆனது, 22,500 ரூபாயில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் வாக்களிக்க வந்த சைக்கிளின் விலை எவ்வளவு, அதை எங்கு வாங்க முடியும் என்பது குறித்து ரசிகர்கள் இப்போதே இணையத்தில் தேட துவங்கிவிட்டனர். அந்த வகையில், நடிக விஜய் வாக்களிக்க வந்த வீடியோ இணையத்தையே கலக்கி கொண்டிருக்கிறது.
தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் தன்னுடைய வீட்டில் இருந்து சைக்கிளில் வந்தார். அவர் சைக்கிளில் வந்ததற்கு முக்கிய காரணம், வாக்குச்சாவடி அருகில் இருப்பது தான் எனவும், கார் ஓட்டி வந்து அங்கு நிறுத்த முடியாது என்பதன் காரணமாகவும், அவர் சைக்கிளில் வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் பலரும், விஜய் ஓட்டி வந்த சைக்கிள் என்ன என்பது குறித்து இணையத்தில் தேட துவங்கிவிட்டனர். விஜய் இன்று ஓட்டி வந்த சைக்கிள், கடந்த 2019-ஆம் ஆண்டு மான்ட்ரா நிறுவனம் வெளியிட்ட மெட்டல் என்ற மொடல் சைக்கிள் ஆகும்.
16 கிலோ எடை கொண்ட இந்த சைக்கிள், கையாள்வதற்கு எளிதாக இருக்கும் என்பதால், இது இந்த சைக்கில் 16 கிலோ மட்டுமே எடை கொண்டது. விஜய் இந்த சைக்கிளை வேகமாக ஓட்டி வந்தார். அதற்கு காரணம், சைக்கிளில் இருக்கும் கியர் அமைப்பும் தான், இந்த சைக்கிளில் 24 ஸ்பீடு கியர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், எளிதாக கியர் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லோகன் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண சாலைகள் மட்டுமின்றி, மழை நேரத்திலும், தண்ணீர் படர்ந்த நிலப்பரப்பிலும் சிறப்பான நிறுத்துதல் திறனை இந்த பிரேக் சிஸ்டம் வழங்கும்.
மவுன்டெயின் பைக் என்ற ரகத்தில் குறிப்பிடப்படும் இந்த மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிள் மொடல் ஆனது, 22,500 ரூபாயில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான…
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா காவல் எல்லைக்கு உட்பட்ட சிக்க அடுகோடி பகுதியில், 1 1/2 வயது குழந்தை ஒன்று…
தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…