தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் பேசிய விஜய் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அண்ணன் என குறிப்பிட்டு பேசினார். விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆனது.
இதனை பார்ப்பதற்காக சண்முக பாண்டியன் தியேட்டருக்கு வந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சண்முக பாண்டியனிடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்டு பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சண்முக பாண்டியன் விஜய்க்கு எனது அப்பா அண்ணன்.
அதனால் அண்ணன் என்று சொன்னார். அவ்வளவுதான். இதில் பெரிதாக பார்க்க எதுவும் கிடையாது. அப்பா விஜயை சின்ன வயதில் இருந்து பார்த்திருக்கிறார். விஜய் அப்பாவை அண்ணன் என்று கூப்பிட்டு பழகிவிட்டார். அதனால் தான் அப்படி அழைக்கிறார். அப்பா எப்போதும் மக்கள் சொத்து தான் என சண்முக பாண்டியன் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…