செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய காரணத்தினால் டிடிஎஃப் வாசன் மதுரையில் கைது செய்யப்பட்டார். இது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்த நிலையில் தற்போது விஜே சித்துவும் அதுபோன்ற சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கின்றார். youtube-இல் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக வலம் வருபவர் டிடிஎஃப் வாசன், சினிமா பிரபலங்களுக்கு நிகராக பேமஸ்-ஆகி வருகிறார் .
அதே அளவுக்கு சர்ச்சைகளிடம் சிக்கி வருகிறார். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதன் காரணமாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி போலீஸ்கே சவால் விடும் வகையில் வீடியோக்களை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு காஞ்சிபுரம் வருகை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து டிடிஎஃப் வாசன் பைக் உடன் சேர்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனால் படுகாயம் அடைந்த அவருக்கு கை உடைந்தது. இந்த விபத்து குறித்து வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதை அடுத்து புழல் சிறையில் சில மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த அவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும் டூவீலர் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.
ஜாமினில் இருந்து வெளியில் வந்த பின்னர் எந்த மத சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த டிடிஎஃப் வாசன் அண்மையில் போன் பேசியபடி கார் ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சாலை விதிகளை மீறியதாக கூறி மதுரை அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர். தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் முறையிட்ட டிடிஎஃப் வாசன்
இதுபோன்ற இனி செய்ய மாட்டேன் என்று கூறியதை தொடர்ந்து ஜாமின் வழங்கப்பட்டது. இந்த சமயத்தில் டிடிஎஃப் வாசனைப் போல பிரபல யூடிபரான விஜே சித்துவும் போன் பேசியபடியே கார் ஓட்டிய வீடியோவை அவரின் ரசிகர்கள் தேடி கண்டுபிடித்து தற்போது வைரலாகி வந்த நிலையில் இது என்ன டிடிஎஃப் வாசனுக்கு ஒரு நியாயம், சிந்துவுக்கு ஒரு நியாயமா? டிடிஎஃப் வாசனை கைது செய்த நீங்கள் ஏன் சித்துவை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.