கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குளகாரன்பட்டியை சேர்ந்த வினிதா என்ற 21 வயது கல்லூரி மாணவி மீது காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பி ஃபார்ம் படித்து வரும் வினிதா உடல் நலக்குறைவால் தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்தபோது நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் ரஞ்சித் கொதிக்கும் சமையல் எண்ணெயை ஜன்னல் வழியாக அவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் தீக்காயம் அடைந்த வினிதா வலி தாங்க முடியாமல் கதறியதை கேட்டு பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வினிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. காதலை மறுத்ததால் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இயற்கைப் பேரிடர்களில் மிகவும் அச்சுறுத்தலானது நிலநடுக்கம். இது எப்போது, எங்கே, எவ்வளவு தீவிரத்துடன் நிகழும் என்பதைக் கணிப்பது நவீன அறிவியலுக்கு…
தமிழகத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அளவில்…
அதிமுகவில் அதிரடி நீக்கம்: லீமா ரோஸ் மார்ட்டின் பதவி மட்டும் தப்பியது ஏன்? தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக்…
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மாநில நிர்வாகத்தை மறுகட்டமைப்பு செய்யும் நோக்கில்…
அதிமுகவின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமிக்குத் (EPS) தகுந்த தண்டனையைக்…
தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று…